இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வருகிறார்.
தடகளத்தில் சாதித்தவர்
1979 முதல் 1998 வரையில் சர்வதேச அளவில் இந்திய அணிக்காக தடகள விளையாட்டுகளில் பங்கேற்று சாதனைகளை படைத்தவர் பி.டி. உஷா.

ஆசிய விளையாட்டில் 4 தங்கம் மற்றும் 7 வெள்ளிப் பதக்கங்களை வென்று இந்தியாவுக்குப் பெருமை தேடித் தந்தவர்.
வெற்றி வீராங்கனை
“நான் ஒருபோதும் ஒலிம்பியனாக விரும்பவில்லை. களத்தில் நான் படைத்த எனது சொந்த சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். நான் யாரையும் வெல்ல வேண்டும் என போட்டியிட்டதில்லை, இதுவே எனது வெற்றியின் ரகசியம்’’ என்கிறார் பி.டி. உஷா
இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் தேர்தலுக்கு மனு தாக்கல் செய்த அவர், போட்டியின்றி தேர்ந்து எடுக்கப்பட்டார்.
ஐஓசி தலைவரானார்
58 வயதாகும் பி.டி.உஷா, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் 16ஆவது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தப் பொறுப்பை அலங்கரிக்கும் முதல் பெண்மணி இவர்தான்.
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி சிறப்பாகச் செயல்பட்டு பதக்கங்களைக் குவிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழலில் பி.டி.உஷா தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.

புதிய பொறுப்பின் மூலம் நாட்டிற்கு மீண்டும் பெருமை தேடித் தரும் முனைப்புடன் உள்ளார் பி.டி.உஷா
-எம். மோகன்