உலகின் முன்னணி காலணி நிறுவனம் – தமிழ்நாட்டில் கால்பதிக்க ஆர்வம்

world-leading-footwear-company-eager-to-set-foot-in-tamil-nadu
[speaker]

ஆப்பிள் நிறுவனத்திற்கு எப்படி பாக்ஸ்கான் நிறுவனம் முக்கியமான சப்ளையராக உள்ளதோ அதுபோன்று, உலகின் முன்னணி ஷூ பிராண்டுகளுக்கு ஒப்பந்த உற்பத்தியாளராக இருக்கிறது Pou Chen Corp.

தைவான் காலணி நிறுவனம்

உலகின் மிகப்பெரிய ஒப்பந்த காலணி உற்பத்தியாளராக இருக்கும் Pou Chen Corp தனது உற்பத்தியை விரிவாக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. எனவே, புதிய உற்பத்தி தளத்தை இந்தியாவில் அதிலும் தமிழ்நாட்டில் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது

தைவான் நாட்டைச் சேர்ந்த இந்த நிறுவனம் தொழிற்சாலை அமைக்கும் திட்டம் உறுதியானால், ரூ. 500 கோடி முதலீட்டில் உற்பத்தி தளத்தை அமைக்க உள்ளது.

world-leading-footwear-company-eager-to-set-foot-in-tamil-nadu

Pou Chen Corp நிறுவனம் முன்னணி காலணி பிராண்டுகளான Nike,Adidas,Asics, ew Balance,Timberland மற்றும் Salomon ஆகியவற்றின் ஒப்பந்த உற்பத்தியாளராக உள்ளது.

300 மில்லியன் காலணிகள்

ஆண்டுக்கு 300 மில்லியன் காலணிகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது. இதனால் எந்தப் பிராண்டுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் தயாரித்து தர முடியும்.

world-leading-footwear-company-eager-to-set-foot-in-tamil-nadu

திருச்சி, விழுப்புரம் மற்றும் துறைமுக நகரமான தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் நிலங்களை தமிழ்நாடு அரசு அளிக்க முன்வந்துள்ள நிலையில், Pou Chen Corp சரியான இடம் குறித்து ஆய்வு செய்து வருகிறது.

தமிழகத்தில் காலணி நிறுவனம்

தமிழ்நாடு அரசின் தோல் மற்றும் காலணி கொள்கையின் கீழ் சுமார் 20-25 உற்பத்தி தொழிற்சாலைகளை நிறுவ இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டுக் காலணி தொழிற்சாலைகளை ஈர்க்க திட்டமிட்டு உள்ளது.

world-leading-footwear-company-eager-to-set-foot-in-tamil-nadu

சுமார் 25 தொழிற்சாலைகள் அமைந்தால், வேலைவாய்ப்பு ஒரு மாவட்டத்தில் மட்டும் அல்லாமல் பல மாவட்ட மக்களுக்கும் கிடைக்கும்.

வேலைவாய்ப்பு பெருகும்

காலணி தொழிற்சாலைகளில் மட்டும் 15,000 முதல் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

-எம். மோகன்

Related Posts
man-height-cake-in-world-cup-shape-asathiya-bakery-company
Read More

உலகக் கோப்பை வடிவில் ஆளுயர கேக் – அசத்திய பேக்கரி நிறுவனம்

இராமநாதபுரத்தில் பேக்கரி நிறுவனம் ஒன்று, உலகக் கோப்பை வடிவில் ஆளுயர கேக் செய்து பொதுமக்களின் பார்வைக்காக வைத்து இருப்பது, கால்பந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
1400-km-scooty-ride-from-mumbai-to-pudukkottai-to-surprise-birthday-boy
Read More

மகனைப் பார்க்க 1400 கிமீ இருசக்கர வாகனத்தில் பயணித்த பெற்றோர்!

குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக எந்த எல்லை வரை செல்பவர்கள்தான் பெற்றோர்கள். அப்படி தன் பிள்ளையின் பிறந்தநாளுக்காக 1400 கிலோமீட்டர் பயணம் செய்த தாய், தந்தையரின் கதைதான்…
six-months-to-detect-epidemics-in-india-this-loyola-college-profs-app
Read More

“கபசுரக் குடிநீரில் கொரோனாவை எதிர்க்கும் 145 மூலக்கூறுகள்” – சென்னை ஆய்வாளர் வின்சென்ட் பேட்டி

சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் ஆராய்ச்சித்துறை தலைவர் முனைவர் எஸ். வின்சென்ட் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், கபசுரக் குடிநீரில் கொரோனா தொற்றை எதிர்க்கும் 145…

யானைகளை விரட்ட நூதன கருவியை பயன்படுத்தும் வனத்துறை

யானைகளை விரட்டுவதற்கு ஒலி எழுப்பும் கருவியை காட்டை ஒட்டிய பகுதிகளில், கோயம்புத்தூர் வனத்துறையினர் அமைத்துள்ளனர். ஒலி எழுப்பும் கருவி சூரியசக்தி பேனலுடன் இணைக்கப்பட்ட இந்த…
Total
1
Share